Wednesday, October 18, 2006

மேலும் தேர்தல் முடிவுகள்

இதுவரை வெளியான முடிவுகள்:

மதுரை மாநகராட்சி: திமுக 14, அதிமுக 3, தேமுதிக 2ல் வெற்றி.
கோவை மாநகராட்சி: திமுக 16, அதிமுக 2ல் வெற்றி.
திருச்சி மாநகராட்சி: திமுக 12, அதிமுக 3, தேமுதிக 1ல் வெற்றி.
சேலம் மாநகராட்சி: திமுக 9, அதிமுக 4, தேமுதிக 2ல் வெற்றி.
நெல்லை மாநகராட்சி: திமுக 23, அதிமுக 6, மற்றவை 4ல் வெற்றி.
தென்காசி: திமுக 8, அதிமுக 3ல் வெற்றி.
காஞ்சிபுரம்: திமுக 14, அதிமுக 10ல் வெற்றி.
கொடைக்கானல்: திமுக 4ல் வெற்றி.
குளச்சல்: சுயேச்சை 18 வார்டுகளில் வெற்றி.
குளித்தலை: திமுக 4, அதிமுக 4ல் வெற்றி.
ராசிபுரம்: திமுக 2 அதிமுக 2ல் வெற்றி.
சங்கரன்கோவில்: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
சாத்தூர்: திமுக 5, மற்றவை 1ல் வெற்றி.
செங்கோட்டை: திமுக 12, அதிமுக 6 தேமுதிக 1ல் வெற்றி.
சீர்காழி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
சிவகங்கை: திமுக 3, அதிமுக 2, தேமுதிக 1ல் வெற்றி.
தாம்பரம்: திமுக 17, அதிமுக 7ல் வெற்றி.
தஞ்சை: திமுக 11, அதிமுக 2ல் வெற்றி.
தாராபுரம்: திமுக 4ல் வெற்றி.
சிவகங்கை: திமுக 7, அதிமுக 4, தேமுதிக 2ல் வெற்றி.
திருவண்ணாமலை: திமுக 8, அதிமுக 4ல் வெற்றி.
திருவொற்றியூர்: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
திருவள்ளூர்: அதிமுக 4, திமுக 3ல் வெற்றி.
துறையூர்: திமுக 6, அதிமுக 1ல் வெற்றி.
தூத்துக்குடி: திமுக 9, அதிமுக 2ல் வெற்றி.
உசிலம்பட்டி: திமுக 7, அதிமுக 4ல் வெற்றி.
வேலூர்: திமுக 8, அதிமுக 2ல் வெற்றி.
விழுப்புரம்: திமுக 5, அதிமுக 1ல் வெற்றி.
விருத்தாச்சலம்: திமுக 8, அதிமுக 7ல் வெற்றி.
விருதுகர்: திமுக 8, அதிமுக 5ல் வெற்றி.
ஆத்தூர்: திமுக 6, அதிமுக 2ல் வெற்றி.
ஆவடி: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.
ஆலந்தூர்: திமுக 18, அதிமுக 1, தேமுதிக 1ல் வெற்றி.
அம்பத்தூர்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
ஆரணி: திமுக 3, அதிமுக 3, தேமுதிக 3ல் வெற்றி.
அரக்கோணம்: திமுக 15, அதிமுக 2ல் வெற்றி.
கோவில்பட்டி: திமுக 5, அதிமுக 3ல் வெற்றி.
குமாரபாளையம்: அதிமுக 6, திமுக 5ல் வெற்றி.
மாதவரம்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
மதுராந்தகம்: திமுக 6, அதிமுக 4ல் வெற்றி.
மேலூர்: திமுக 4, அதிமுக 3ல் வெற்றி.
மணப்பாறை: அதிமுக 2, திமுக 1ல் வெற்றி.
மன்னார்குடி: அதிமுக 7, திமுக 3ல் வெற்றி.
நெல்லிக்குப்பம்: திமுக 4, அதிமுக 2, தேமுதிக 2ல் வெற்றி.
ஊட்டி: திமுக 6ல் வெற்றி.
பல்லாவரம்: திமுக 23, அதிமுக 4ல் வெற்றி.
பள்ளிப்பாளையம்: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.
சீர்காழி: அதிமுக 1, திமுக 1 வெற்றி.
நாகை: அதிமுக 7, திமுக 2 வெற்றி.
வேதாரண்யம்: அதிமுக 2, திமுக 2 வெற்றி.
செங்கல்பட்டு: திமுக 2, அதிமுக , தேமுதிக 2ல் வெற்றி.
எண்ணூர்: அதிமுக 2, திமுக 2 தேமுதிக 1ல் வெற்றி.
மணலி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
திருத்தணி: திமுக 3, அதிமுக1ல் வெற்றி.
செங்கோட்டை: திமுக 10, அதிமுக 3, தேமுதிக 1ல் வெற்றி.
சிவகாசி: திமுக 5, அதிமுக 1ல் வெற்றி.
ஆவடி: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.
சின்னமனூர்: திமுக 2, மற்றவை 2ல் வெற்றி.
சிதம்பரம்: திமுக 1ல் வெற்றி.
கடலூர்: திமுக 7, அதிமுக 1ல் வெற்றி.
திண்டிவனம்: திமுக 1ல் வெற்றி.
எடப்பாடி: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
தாராபுரம்: திமுக 4 வார்டுகளில் வெற்றி.
திருமங்கலம்: அதிமுக 4, திமுக, 2, தேமுதிக 2ல் வெற்றி.
திருவாரூர்: திமுக 12, அதிமுக 2ல் வெற்றி.
சேலம்: திமுக, பாமக, தேமுதிக தலா 2 வார்டுகளில் வெற்றி.
திருவாரூர் நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது.
கோபி: திமுக 4, அதிமுக 1ல் வெற்றி.
குளச்சல்: சுயே. 10, திமுக 1ல் வெற்றி.
கத்திவாக்கம்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
மேலூர்: திமுக 4, அதிமுக 3ல் வெற்றி.
மயிலாடுதுறை: திமுக, அதிமுக தலா 1ல் வெற்றி.
பொள்ளாச்சி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
ராஜபாளையம்: திமுக 10, அதிமுக 3, தேமுதிக 2ல் வெற்றி.
சங்கரன்கோவில்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
செய்யாறு: திமுக 3ல் வெற்றி.
சிவகங்கை: அதிமுக 1ல் வெற்றி.
திருத்துறைப்பூண்டி: திமுக 12ல் வெற்றி
திருவண்ணாமலை : அதிமுக 4, திமுக 3ல் வெற்றி.
உசிலம்பட்டி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
நெல்லை: திமுக 7, அதிமுக 3ல் வெற்றி.
சேலம்: தேமுதிக 1 வெற்றி
அம்பத்தூர்: அதிமுக 1 வார்டில் வெற்றி.
அருப்புக்கோட்டை: திமுக 4, அதிமுக 2ல் வெற்றி.
பவானி: திமுக 6ல் வெற்றி.
போடி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
திண்டுக்கல்: திமுக 12, அதிமுக 7ல் வெற்றி.
எடப்பாடி: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
ஓசூர்: திமுக 6, அதிமுக 1ல் வெற்றி.
காரைக்குடி: திமுக 5 வார்டுகளில் வெற்றி.
மன்னார்குடி: அதிமுக 5, திமுக 3ல் வெற்றி.
ஊட்டி: திமுக 4, மற்றவை 8ல் வெற்றி.
பரமக்குடி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
பழனி: திமுக 4, அதிமுக 4ல் வெற்றி.
மதுரை: திமுக 7 தேமுதிக 1 வெற்றி
ஆத்தூர்: திமுக 5, பாமக 1, அதிமுக 2 வெற்றி.
விருத்தாச்சலம்: திமுக 3, அதிமுக 1 வெற்றி.
சீர்காழி: திமுக 2, அதிமுக 1 வெற்றி.
மேட்டூர்: திமுக 3 , சுயே 1 வெற்றி
சேலம்: அதிமுக 4, திமுக 1 வெற்றி.
திருச்சி மாநகராட்சி: திமுக 4, மதிமுக 1, அதிமுக 1, கம்யூனிஸ்ட் 1
நெல்லை: முதல் வார்டுகளில் அதிமுக வெற்றி
குற்றாலம் பேரூராட்சி: திமுக வெற்றி
கிருஷ்ணகிரி: திமுக 3, தேமுதிக 1, சுயேட்சை 2, காங் 1, அதிமுக 1
கோவை மாநகராட்சி : திமுக 2, மார்க்சிஸ்ட் 1, காங்.1, அதிமுக 1, சுயேட்சை 1
பெரியகுளம்: திமுக 3 வெற்றி அதிமுக 2 வெற்றி
தேனி: அதிமுக 3 வெற்றி, திமுக 1 வெற்றி
திருவள்ளூர்: அதிமுக 4 வெற்றி, திமுக 3 வெற்றி
தூத்துக்குடி: திமுக 4 வெற்றி
காரைக்குடி: திமுக 6 வார்டுகளில் வெற்றி
கூத்தாநல்லூர்: திமுக 10, அதிமுக 2
கரூர்: திமுக 6, அதிமுக 3
திருத்துறைப்பூண்டி: திமுக 6, காங். 1 ஈரோடு: 83 பேரூராட்சி வார்டுகளில் 25ல் திமுக வெற்றி, சுயே. 32
நாமக்கல்: திமுக, அதிமுக தலா 6 வார்டுகளில் வெற்றி
விழுப்புரம்: திமுக 20, அதிமுக 15
பல்லாவரம்: திமுக 26 வார்டுகளில் முன்னணி
மேல் விஷாரம்: திமுக 9, அதிமுக 5, காங். 2, சுயேச்சை 1
கன்னியாகுமரி: 6 சுயேச்சைகள் வெற்றி
அரக்கோணம்: திமுக 7, அதிமுக 1
குடியாத்தம்: திமுக 3, அதிமுக 1, சுயேச்சை 1
திருப்பத்தூர்: திமுக 1
ராணிப்பேட்டை: திமுக1, காங்கிரஸ் 1
குழித்துறை பாஜக 2 வார்டுகளில் வெற்றி
சேலம்: 2 வார்டுகளில் தேமுதிக வெற்றி
திருவாரூர்: திமுக 4, காங். 2, அதிமுக 1 சுயேச்சை 3
குளச்சல்: திமுக 1, பாஜக 1
ஒட்டன்சத்திரம் திமுக 4 இடங்களில் முன்னணி
போடிநாயக்கனூர்: திமுக 6 அதிமுக 3
சிட்லபாக்கம்: திமுக 1 அதிமுக 1 வெற்றி
பள்ளிக்கரணை: 2 வார்டுகளில் திமுக வெற்றி, அதிமுக 1வெற்றி
விருதுநகர்: திமுக 5 வெற்றி, அதிமுக 2 வெற்றி
தாம்பரம்: 17ல் திமுக முன்னணி, அதிமுக 6
நாமக்கல்: திமுக 4, அதிமுக 2 சுயேச்சை 1 வெற்றி
வேலூர்: 2 வார்டுகளில் மதிமுக வெற்றி
தர்மபுரி: 1 வார்டில் அதிமுக வெற்றி
ஆலந்தூர் 18 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
உசிலம்பட்டி: 2 வார்டுகளில் திமுக வெற்றி
அரியலூர் : 3 வார்டுகளில் திமுக வெற்றி
கோவை: திமுக கூட்டணி 2 வார்டுகளில் வெற்றி
நெல்லை: 2 வார்டுகளில் திமுக வெற்றி
கும்பகோணம்: 9 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
திருச்செங்கோடு: 3 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
மதுரை மாநகராட்சி: 51வது வார்டில் திமுக வெற்றி
குழித்துறை நகராட்சி: 3 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
துறையூர் நகராட்சி: 2வது வார்டில் திமுக வெற்றி
பண்ருட்டி 4 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
திருச்சி மாநகராட்சி: 41வது வார்டில் திமுக வெற்றி

தேர்தல் முடிவுகள்

மாலை 2.30 நிலவரப்படி:

மதுரை மாநகராட்சி: திமுக 9, அதிமுக 3, தேமுதிக 2ல் வெற்றி.
கோவை மாநகராட்சி: திமுக 11, அதிமுக 2ல் வெற்றி.
திருச்சி மாநகராட்சி: திமுக 12, அதிமுக 3, தேமுதிக 1ல் வெற்றி.
சேலம் மாநகராட்சி: திமுக 4, தேமுதிக 2ல் வெற்றி.
நெல்லை மாநகராட்சி: திமுக 7, அதிமுக 3ல் வெற்றி.
சீர்காழி: அதிமுக 1, திமுக 1 வெற்றி.
நாகை: அதிமுக 7, திமுக 2 வெற்றி.
வேதாரண்யம்: அதிமுக 2, திமுக 2 வெற்றி.
செங்கல்பட்டு: திமுக 2, அதிமுக , தேமுதிக 2ல் வெற்றி.
எண்ணூர்: அதிமுக 2, திமுக 2 தேமுதிக 1ல் வெற்றி.
மணலி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
திருத்தணி: திமுக 3, அதிமுக1ல் வெற்றி.
செங்கோட்டை: திமுக 10, அதிமுக 3, தேமுதிக 1ல் வெற்றி.
சிவகாசி: திமுக 5, அதிமுக 1ல் வெற்றி.
ஆவடி: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.
சின்னமனூர்: திமுக 2, மற்றவை 2ல் வெற்றி.
சிதம்பரம்: திமுக 1ல் வெற்றி.
கடலூர்: திமுக 7, அதிமுக 1ல் வெற்றி.
திண்டிவனம்: திமுக 1ல் வெற்றி.
எடப்பாடி: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
தாராபுரம்: திமுக 4 வார்டுகளில் வெற்றி.
திருமங்கலம்: அதிமுக 4, திமுக, 2, தேமுதிக 2ல் வெற்றி.
திருவாரூர்: திமுக 12, அதிமுக 2ல் வெற்றி.
சேலம்: திமுக, பாமக, தேமுதிக தலா 2 வார்டுகளில் வெற்றி.
திருவாரூர் நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது.
கோபி: திமுக 4, அதிமுக 1ல் வெற்றி.
குளச்சல்: சுயே. 10, திமுக 1ல் வெற்றி.
கத்திவாக்கம்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
மேலூர்: திமுக 4, அதிமுக 3ல் வெற்றி.
மயிலாடுதுறை: திமுக, அதிமுக தலா 1ல் வெற்றி.
பொள்ளாச்சி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
ராஜபாளையம்: திமுக 10, அதிமுக 3, தேமுதிக 2ல் வெற்றி.
சங்கரன்கோவில்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
செய்யாறு: திமுக 3ல் வெற்றி.
சிவகங்கை: அதிமுக 1ல் வெற்றி.
திருத்துறைப்பூண்டி: திமுக 12ல் வெற்றி
திருவண்ணாமலை : அதிமுக 4, திமுக 3ல் வெற்றி.
உசிலம்பட்டி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
நெல்லை: திமுக 7, அதிமுக 3ல் வெற்றி.
சேலம்: தேமுதிக 1 வெற்றி
அம்பத்தூர்: அதிமுக 1 வார்டில் வெற்றி.
அருப்புக்கோட்டை: திமுக 4, அதிமுக 2ல் வெற்றி.
பவானி: திமுக 6ல் வெற்றி.
போடி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
திண்டுக்கல்: திமுக 12, அதிமுக 7ல் வெற்றி.
எடப்பாடி: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
ஓசூர்: திமுக 6, அதிமுக 1ல் வெற்றி.
காரைக்குடி: திமுக 5 வார்டுகளில் வெற்றி.
மன்னார்குடி: அதிமுக 5, திமுக 3ல் வெற்றி.
ஊட்டி: திமுக 4, மற்றவை 8ல் வெற்றி.
பரமக்குடி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
பழனி: திமுக 4, அதிமுக 4ல் வெற்றி.
மதுரை: திமுக 7 தேமுதிக 1 வெற்றி
ஆத்தூர்: திமுக 5, பாமக 1, அதிமுக 2 வெற்றி.
விருத்தாச்சலம்: திமுக 3, அதிமுக 1 வெற்றி.
சீர்காழி: திமுக 2, அதிமுக 1 வெற்றி.
மேட்டூர்: திமுக 3 , சுயே 1 வெற்றி
சேலம்: அதிமுக 4, திமுக 1 வெற்றி.
திருச்சி மாநகராட்சி: திமுக 4, மதிமுக 1, அதிமுக 1, கம்யூனிஸ்ட் 1
நெல்லை: முதல் வார்டுகளில் அதிமுக வெற்றி
குற்றாலம் பேரூராட்சி: திமுக வெற்றி
கிருஷ்ணகிரி: திமுக 3, தேமுதிக 1, சுயேட்சை 2, காங் 1, அதிமுக 1
கோவை மாநகராட்சி : திமுக 2, மார்க்சிஸ்ட் 1, காங்.1, அதிமுக 1, சுயேட்சை 1
பெரியகுளம்: திமுக 3 வெற்றி அதிமுக 2 வெற்றி
தேனி: அதிமுக 3 வெற்றி, திமுக 1 வெற்றி
திருவள்ளூர்: அதிமுக 4 வெற்றி, திமுக 3 வெற்றி
தூத்துக்குடி: திமுக 4 வெற்றி
காரைக்குடி: திமுக 6 வார்டுகளில் வெற்றி
கூத்தாநல்லூர்: திமுக 10, அதிமுக 2
கரூர்: திமுக 6, அதிமுக 3
திருத்துறைப்பூண்டி: திமுக 6, காங். 1
ஈரோடு: 83 பேரூராட்சி வார்டுகளில் 25ல் திமுக வெற்றி, சுயே. 32
நாமக்கல்: திமுக, அதிமுக தலா 6 வார்டுகளில் வெற்றி
விழுப்புரம்: திமுக 20, அதிமுக 15
பல்லாவரம்: திமுக 26 வார்டுகளில் முன்னணி
மேல் விஷாரம்: திமுக 9, அதிமுக 5, காங். 2, சுயேச்சை 1
கன்னியாகுமரி: 6 சுயேச்சைகள் வெற்றி
அரக்கோணம்: திமுக 7, அதிமுக 1
குடியாத்தம்: திமுக 3, அதிமுக 1, சுயேச்சை 1
திருப்பத்தூர்: திமுக 1
ராணிப்பேட்டை: திமுக1, காங்கிரஸ் 1
குழித்துறை பாஜக 2 வார்டுகளில் வெற்றி
சேலம்: 2 வார்டுகளில் தேமுதிக வெற்றி
திருவாரூர்: திமுக 4, காங். 2, அதிமுக 1 சுயேச்சை 3
குளச்சல்: திமுக 1, பாஜக 1
ஒட்டன்சத்திரம் திமுக 4 இடங்களில் முன்னணி
போடிநாயக்கனூர்: திமுக 6 அதிமுக 3
சிட்லபாக்கம்: திமுக 1 அதிமுக 1 வெற்றி
பள்ளிக்கரணை: 2 வார்டுகளில் திமுக வெற்றி, அதிமுக 1வெற்றி
விருதுநகர்: திமுக 5 வெற்றி, அதிமுக 2 வெற்றி
தாம்பரம்: 17ல் திமுக முன்னணி, அதிமுக 6
நாமக்கல்: திமுக 4, அதிமுக 2 சுயேச்சை 1 வெற்றி
வேலூர்: 2 வார்டுகளில் மதிமுக வெற்றி
தர்மபுரி: 1 வார்டில் அதிமுக வெற்றி
ஆலந்தூர் 18 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
உசிலம்பட்டி: 2 வார்டுகளில் திமுக வெற்றி
அரியலூர் : 3 வார்டுகளில் திமுக வெற்றி
கோவை: திமுக கூட்டணி 2 வார்டுகளில் வெற்றி
நெல்லை: 2 வார்டுகளில் திமுக வெற்றி
கும்பகோணம்: 9 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
திருச்செங்கோடு: 3 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
திருச்சி மாநகராட்சி: 3 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
நெல்லை மாநகராட்சி: 3 வார்டுகளில் அதிமுக வெற்றி
மதுரை மாநகராட்சி: 4 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
மதுரை மாநகராட்சி: 51வது வார்டில் திமுக வெற்றி
குழித்துறை நகராட்சி: 3 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
துறையூர் நகராட்சி: 2வது வார்டில் திமுக வெற்றி
பண்ருட்டி 4 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
திருச்சி மாநகராட்சி: 41வது வார்டில் திமுக வெற்றி

நன்றி: தட்ஸ் தமிழ்

அதிமுகவிலிருந்து ராதிகா நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அதிமுக கட்சியிலிருந்து ராதிகா சரத்குமாரை நீக்குவதாக ஜெயலலிதாவால் அறிக்கப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை - கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், நடிகை ராதிகா சரத்குமார், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், நடிகை ராதிகா சரத்குமார், அ.இ.அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

(தேர்தல் பிரச்சாரம் செய்ய மறுப்பு, சன் டிவியிலிருந்து தொலைக்காட்சித் தொடர்களை நீக்க மறுத்தது, ஜெயா டிவியுடன் ஒப்பந்தம் செய்யாத்து ஆகியவையே கட்சி விரோத நடவடிக்கைகள் என கருதப்படுகிறது.)

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல் வன்முறை வழக்கு காரணமாக சென்னை மாநகராட்சி தவிர பிற உள்ளாட்சி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி தேர்தலில் கலவரம் நடந்ததாக வழக்கு எதிரொலி
சென்னையில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்
தமிழகத்தின் மற்ற இடங்களின் முடிவு இன்று தெரியும்

மாநகராட்சி தேர்தலில் கலவரம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு எதிரொலியாக, சென்னையில் இன்று மாலை வரை ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தின் மற்ற இடங்களில், திட்ட மிட்டபடி ஓட்டு எண்ணிக்கை தொடங்கி இன்று முடிவுகள் வெளியாகும்.

சென்னை, அக்.18-

தமிழ்நாட்டில், கடந்த 13 மற்றும் 15-ந்தேதிகளில், இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.

மாநகராட்சி, நகராட்சி உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அ.தி.மு.க. வழக்கு

கடந்த 13-ந்தேதி நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் கலவரம் நடந்து, கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், இந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்தவேண்டும் என்று, மனுதாரர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில், நேற்று 2-வது நாளாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையர் சார்பில் தமிழக அரசின் தலைமை வக்கீல் ஆர்.விடுதலை ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின்போது, மாநகராட்சி தேர்தலில் வன்முறைகள் நடந்தபோது, தேர்தல் அதிகாரிகள் விதிமுறைகளை கடைப்பிடித்தனரா? என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினார்கள்.

ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்

எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்று முடிவுக்கு வர தேர்தல் ஆணையத்துக்கு 5 நிமிடங்கள் அவகாசம் அளித்த நீதிபதிகள், அப்படி நீங்களே முடிவு எடுக்காவிட்டால் விரும்பத்தகாத இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் கலந்து பேசிய தலைமை வக்கீல் விடுதலை, விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று கோர்ட்டு நேரம் முடியும் வரை சென்னை மாநகராட்சி பகுதி ஓட்டுகளை எண்ணமாட்டோம் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அவர் உத்தரவாதம் அளித்தார்.

பிற்பகல் 2.30 மணிக்கு.....

அதைத்தொடர்ந்து, "கோர்ட்டில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து எந்தெந்த வார்டுகளில் மறுதேர்தல் நடத்தப்படும் என்பதை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோர்ட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, சென்னை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை, இன்று மாலை வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

மற்ற இடங்களில்

சென்னை மாநகராட்சி தவிர, தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் ஓட்டு எண்ணிக்கை திட்டமிட்டபடி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முற்பகல் முதல் முடிவுகள் வெளிவரத்தொடங்கும்.

செய்தி: தினத்தந்தி

Tuesday, October 17, 2006

மதுரையில் திமுக வெற்றி

பழனிவேல்ராஜன் மறைவை அடுத்து மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு விவரம்:
கவுஸ்பாட்சா-திமுக 50,994 (56%)
ராஜன் செல்லப்பா-அதிமுக 19,909 (23%)
பன்னீர்செல்வம்-தேமுதிக 17,394 (20%)

இரண்டாவதாக வந்த அதிமுக வேட்பாளரைவிட 31085 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட வாக்கு வித்தியாசம் அதிகம். அதிமுக தேமுதிக இரண்டும் பெற்ற வாக்குகளை கூட்டினாலும் திமுக வாக்குகள் அதைவிட அதிகம்.

அதிமுக வாக்குகளையே தேமுதிக பிரித்துள்ளதாக தெரிகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக 38.2 சதவீத வாக்குகளைப்பெற்றிருந்தது. திமுக 45.83 சதவீதம்பெற்றது. இம்முறை திமுகவுக்கு மேலும் 11 சதவீதம் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது. அதே சமயம் அதிமுக 18 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. அந்த வாக்குகளையே தேமுதிக பெற்றிருக்க வேண்டும். அதிகப்படியாக இம்முறை வாக்களித்த புதிய வாக்காளர்களில் பலரும் திமுக அணிக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பதாக தோன்றுகிறது. சிறிய அளவு தேமுதிகவுக்கு கிடைத்திருக்கலாம்.

Saturday, October 14, 2006

தேர்தல்வன்முறை வழக்கு விசாரணை

சென்னை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. வழக்கு பதில் தருமாறு தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, அக். 14-

சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுபற்றி பதில் தருமாறு மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. வழக்கு

நேற்று காலையில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை, 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வக்கீல்கள் சந்தித்து சென்னை மாநகராட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், இந்த வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறினார்கள்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று ஐகோர்ட்டுக்கு விடுமுறை ஆகும். இருந்தபோதிலும் இந்த வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.

நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர், அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிப்பார்கள் என்று பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது. ஐகோர்ட்டு பதிவாளர் மற்றும் அதிகாரிகள் காலை 12 மணிக்கே கோர்ட்டுக்கு வந்துவிட்டனர். மதியம் அ.தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 மணிக்கு தான் அ.தி.மு.க சார்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மீனவ அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அ.தி.மு.க. கூறியிருப்பதாவது:-

திட்டமிட்டு தாக்குதல்

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிக அளவில் வாக்குகளை பெற்று சென்னையில் வெற்றி பெற்றது. இதனால் மாநகராட்சி தேர்தலில் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொள்ளாமல் தி.மு.க.வினர் திட்டமிட்டு தேர்தலின்போது அராஜகத்தில் ஈடுபட்டனர். 155 வார்டுகளிலும் புகுந்து பூத் ஏஜெண்டுகளை தாக்கி ஓட்டு சாவடியை கைப்பற்றி விட்டனர். போலீசார் துணையுடன் வாக்குசாவடிக்குள் நுழைந்தனர்.

ஓட்டுபெட்டியை கைப்பற்றி

ஓட்டுப்பெட்டியையும், வாக்கு சீட்டுகளையும் கைப்பற்றி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டுள்ளனர். இதுபற்றி கூடுதல் போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர் பதில் தெரிவிக்கும் நிலையில் இல்லை.

வாக்களிக்க வந்த அ.தி.மு.க.வினர் பல இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் வேட்பாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

உயிருக்கு பயந்து ஓட்டம்

ஒரு வாக்குசாவடியை கைப்பற்றி அதில் உள்ள ஓட்டுப்பெட்டியை தூக்கி கொண்டு வந்து மரத்தடியில் வைத்து கள்ள ஓட்டு போடப்பட்டது. இதை அ.தி.மு.க.வினர் கண்டு அவர்களிடம் இருந்த வாக்குசீட்டுகள் மற்றும் முத்திரைகளையும் கைப்பற்றி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வந்துவிட்டனர்.

பல்வேறு ஓட்டுசாவடிகளில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் வக்கீல்கள் ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 27 வேட்பாளர்கள் வக்கீல்களாகும். இப்படிப்பட்ட வேட்பாளர்களே அடிவாங்கி உயிருக்கு பயந்து ஓடிவந்துவிட்டனர். இதிலிருந்து சென்னை தேர்தலில் ரவுடிகள் அராஜகம் நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. பல வாக்குசாவடிகள் மதியம் 12 மணிக்கே ஓட்டுப்பதிவு முடிந்ததாக கூறி ஓட்டுசாவடியை இழுத்து மூடிவிட்டனர்.

செல்லாது என்று அறிவிக்கவேண்டும்

155 வார்டுகளிலும் ரவுடிகள் மூலம் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு வாக்குசாவடிகள் கைப்பற்றப்பட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. ஏஜெண்டுகள் எல்லோரும் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை

நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்பு நேற்று மாலை 5.15 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. எம்.பி.யும், வக்கீலுமான என்.ஜோதி ஆஜராகி வாதாடினார். அவர் கோர்ட்டில் கூறியதாவது:-

வக்கீல் என்.ஜோதி:- வாக்குசாவடியில் தி.மு.க.வினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாக்குசீட்டுகளையும், முத்திரைகளையும் இக்கோர்ட்டில் தாக்கல் செய்கிறோம். வாக்குசீட்டுகள் அனைத்திலும் உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்ட நிலையில் உள்ளது. எனவே இந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை ஓட்டு எண்ணுவதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு வக்கீல் என்.ஜோதி வற்புறுத்தி வாதாடினார்.

ஐகோர்ட்டு பாதுகாப்பில்

115, 145, 147 வார்டுகளில் இந்த வாக்குசீட்டுகள் தி.மு.க.வினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வக்கீல் என்.ஜோதி தெரிவித்தார்.

இந்த வாக்குச்சீட்டுகளையும், 3 முத்திரைகளையும் கோர்ட்டு பாதுகாப்பில் வைக்கும்படி பதிவாளர் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த சூழ்நிலையில் அட்வகேட் ஜெனரல் ஆர்.விடுதலை கோர்ட்டில் வந்து ஆஜரானார். தான் தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜராவதாக தெரிவித்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்தார். வக்கீல் ஜோதி குறுக்கிட்டு ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநில தேர்தல் கமிஷன், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், தி.மு.க. போன்ற பிரதிவாதிகளிடம் பதில் கேட்டபிறகே எந்த உத்தரவுமë பிறப்பிக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்பிறகு மனுமீதான விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மனுதாரர் சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்த வாக்குச்சீட்டுகளையும், முத்திரைகளையும் அட்வகேட் ஜெனரல் பார்வையிடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க. கட்சி சார்பில் பொதுச்செயலாளர் ராமுவசந்தன் இந்த வழக்கில் தன்னையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

அ.தி.மு.க. போலவே மனுவில் குற்றச்சாட்டுகளை கூறி சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கமிஷனர் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.விடுதலை நோட்டீசை பெற்றுக்கொண்டார். தி.மு.க. சார்பில் வக்கீல் ஜே.ரவீந்திரனும், போலீஸ் சார்பில் வக்கீல் ஸ்ரீகாந்தும் நோட்டீசை பெற்றுக்கொண்டனர். இதன்பிறகு வழக்கு விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்குள் தேர்தல் கமிஷனர், டி.ஜி.பி., தி.மு.க. ஆகியவை பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையின்போது காயமடைந்த பலர் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

கூச்சல்-குழப்பம்

இந்த வழக்கையொட்டி பிற்பகலில் இருந்தே நூற்றுக்கு மேற்பட்ட அ.தி.மு.க.வினர் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர். பலர் காயத்துடன் தலை, கை போன்றவற்றில் கட்டுப்போட்ட நிலையில் வந்திருந்தனர். கோர்ட்டுக்குள்ளும், வெளியிலும் கூடியிருந்தனர். நீதிபதிகள் கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பாக மின் இணைப்பில் அடிக்கடி தடை ஏற்பட்டது.

கோர்ட்டுக்குள் விளக்குகள் அணைந்தபோது சினிமா கொட்டகையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்வதுபோல கோர்ட்டுக்குள் இருந்த அ.தி.மு.க.வினர் ஆரவாரம் செய்தனர். வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்ததும் கோர்ட்டு வளாகத்திற்குள் கூடி போலீசாருக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக கோஷமிட்டனர்.

செய்தி : தினத்தந்தி

Friday, October 13, 2006

தேர்தல் வன்முறை-2

விறுவிறுப்பான வாக்குப்பதிவு! சென்னை மாநகராட்சி

சென்னை, அக். 13-
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடந்தது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. பெண்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். எல்லா பூத்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய 4 மாநகராட்சிகள், 45 நகராட்சிகள், 23 மூன்றாம் நிலை நகராட்சிகள், 281 பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி, சிற்றூராட்சிகள் உள்பட மொத்தம் 28 ஆயிரத்து 479 உள்ளாட்சி அமைப்புகளில் 67 ஆயிரத்து 760 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க எல்லா இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழக போலீசாருடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநில போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் காலையில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகின்றனர். பல இடங்களில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

சில இடங்களில், ஓட்டுச்சீட்டுகளில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்கள் மாறி இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. அந்த இடங்களில் மாற்று ஏற்பாடுகளுடன் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. கள்ள ஓட்டு போடுவதாக கூறி பல இடங்களில் அரசியல் கட்சியினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. இதில், 1,326 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநகர் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 295 வாக்குச்சாவடிகளில் 16 ஆயிரத்து 475 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். எல்லா வார்டுகளிலும் காலையிலேயே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

முதல்வர் கருணாநிதி, கோபாலபுரம் 112-வது வார்டில் உள்ள சாரதா மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணிக்கு ஓட்டு போட்டார். அவருடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வரின் குடும்பத்தினரும் வந்து ஓட்டு போட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் வந்து 113-வது வார்டு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
சென்னை பெசன்ட் நகர் அறிஞர் அண்ணா பள்ளியில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து 50 ஓட்டு சீட்டுக்களை கைப்பற்றிச் சென்றது. மீன்பிடி துறைமுகம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கள்ள ஓட்டு போடப்படுவதாக கூறி ம.தி.மு.க.வினர் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிந்தாதிரிப்பேட்டை கொருவப்பா செட்டி தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கள்ள ஓட்டு போடுவதாக கிடைத்த தகவலின்பேரில் ம.தி.மு.க. வேட்பாளர் சேகர் தலைமையில் சிலர் அங்கு விரைந்தனர். வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றிருந்த பொதுமக்களிடம் சென்று, Ôஇங்கு கள்ள ஓட்டு போடப்படுகிறதாÕ என சேகர் விசாரித்தார். இதைக் கேட்டு கோபமடைந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த அடையாள அட்டையை காட்டி ‘எங்களுக்கு இதே பகுதிதான், நாங்கள் கள்ள ஓட்டு போட வரவில்லைÕ என கூறி வாக்குவாதம் செய்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் சேகர் கீழே விழுந்தார். காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அசோக் நகர் ஜவகர் வித்யாலயா பள்ளிக்குள் அ.தி.மு.க.வினர் புகுந்து 3 ஓட்டுப் பெட்டிகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் ஓட்டுப் பதிவு பாதிக்கப்பட்டது.
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மற்றும் ஓட்டேரியில் ஆயிரத்து 500 அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். டிரஸ்ட்புரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நக்கீரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர். நகர், காமராஜர் ரோடு - அண்ணா மெயின் ரோடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒரு கும்பல் புகுந்து பொதுமக்களை அடித்து விரட்டி ஓட்டு போடவிடாமல் தடுத்தது. இதை அறிந்த தி.மு.க.வினர் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரையருவர் கல் வீசி தாக்கிக் கொண்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். கல் வீச்சில் ஒரு போலீஸ்காரரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிந்தாதிரிப்பேட்டை தீவுத் திடல் அருகே கேந்திர வித்யாலயா பள்ளியில் அ.தி.மு.க.வினர் புகுந்து 3 ஓட்டுப் பெட்டிகளை அடித்து உடைத்தனர். அங்கு ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. திருவான்மியூர் ஜூனியர் இன்ஜினியர் அலுவலகம் அருகே துரைப்பாக்கம் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராணியின் கணவர் குணசேகர், தனது ஆதரவாளர்களுடன் ஒரு டாடா சுமோ, 2 குவாலிஸ் கார்களில் கள்ள ஓட்டு போட வந்தார். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். கார்களையும் கைப்பற்றினர்.

தேர்தல் கலாட்டா

சென்னை, அக். 13-
?சென்னையின் 132வது வார்டு அதிமுக வேட்பாளர் கடும்பாடியின் ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் வில்லியம்ஸ் ஆதரவாளர்களுக்கும் இன்று காலை 8 மணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. இந்நிலையில், உதயம் தியேட்டர் எதிரே உள்ள அண்ணா சமூகநல கூட வாக்குச் சாவடிக்கு 9.15க்கு ஆதரவாளர்களுடன் கடும்பாடி வந்தார். கள்ள ஓட்டு போட அவர்கள் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கடும்பாடியும் 20 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

?131வது வார்டில் அதிமுக - பாமக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸ் தடியடி நடத்தினர்.
?14வது வார்டின் மூன்று பூத்களிலும் 500க்கு மேல் கள்ள ஓட்டு போட்டதாக எண்ணூர் ஹைரோடு சூரியநாராயணன் தெரு அருகில் மதிமுக வேட்பாளர் ராஜவள்ளி தலைமையில் ஆதரவாளர்கள் காலை 8.15க்கு மறியல் செய்தனர். ஆனால், அப்போது வரை மொத்த வாக்குகளே 194தான் பதிவாகியிருந்தன. ஒன்றரை மணி நேரம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் முடியும் நேரத்தில், மொத்தம் 249 ஓட்டுகள் பதிவாகியிருந்தன.

? 109வது வார்டு தேனாம்பேட்டையின் மாநகராட்சி மாதிரி பள்ளியில் 1680, 81 ஆகிய இரண்டு பூத்களில் தேமுதிக வேட்பாளர் தங்கமணியின் மகன் ரஞ்சித் அத்துமீறி புகுந்து, வாக்குச் சீட்டுகளை பறித்துச் சென்றார். இதனால், 9 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அவர் எடுத்துச்சென்ற வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக, வேறு சீட்டுகள் கொண்டு வரப்பட்டு, 9 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்தது. வாக்குச்சாவடி அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித்தை போலீசார் தேடிவருகின்றனர்.

அதிமுக&பாமக மோதல் வாக்குப்பதிவு நிறுத்தம்
80-வது வார்டில் பரபரப்பு

சென்னை, அக். 13-
சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட 80வது வார்டில் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது, அதிமுகவினர் - பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குப் பெட்டிகள், சாவடியின் கதவு, ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 700 பேர் ஓட்டு போட்ட நிலையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சியின் 80வது வார்டில் அதிமுக பெண் வேட்பாளர் நாகமணி, பாமக வேட்பாளர் ஏழுமலை மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தையில் சீட் கிடைக்காததால், கணேசன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

பல்லவன் சாலை கேந்திர வித்யாலயா பள்ளியின் 8 பூத்களில் இந்த வார்டுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்தில் 700 ஓட்டுகள் பதிவான நிலையில், வாக்குச் சாவடிக்குள் கணேசன் நுழைந்தார். Ôஅதிகளவில் கள்ள ஓட்டு போடப்படுகிறது. தேர்தலை நிறுத்த வேண்டும்Õ என்று கூறி ரகளை செய்தார். அப்போது, அதிமுக வேட்பாளர் நாகமணியின் ஆதரவாளர்களும் உள்ளே புகுந்து கோஷம் எழுப்பினர். மோதலில் ஈடுபட்டனர்.

பள்ளியின் 3வது பூத்தில் நுழைந்த அதிமுகவினர் வாக்குப் பெட்டிகளையும் ஜன்னல், கதவுகளையும் உடைத்தனர். அடுத்த சிறிது நேரத்தில், மற்ற பூத்களிலும் கலவரம் ஏற்பட்டது. வாக்குச்சீட்டு, பெட்டி, மை உட்பட எல்லாவற்றையும் அதிமுகவினர் சூறையாடிச் சென்றதையடுத்து, அரை மணி நேரத்தில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

இதனால், பாமகவினருக்கும் அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடித்துக்கொண்டனர். இதில் நாகமணியின் மகன் தனசேகர், கணவர் ஆறுமுகம் ஆகியோருக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது.

அதிமுக மறியல்: பஸ்கள் உடைப்பு சென்னையில் 200 பேர் கைது

சென்னை, அக். 13-
சென்னையில் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக கூறி அ.தி.மு.க.வினர் தகராறு செய்தனர். ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தி.நகர், சூளைமேடு, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், அசோக்நகர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய இடங்களில் மறியல் நடந்தது. தி.நகர் பஸ் நிலையம் அருகே தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கலைராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர போலீசார் மீது கல் வீசி தாக்கினார்கள். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவான்மியூரில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் குணசேகரன் தலைமையில் கள்ள ஓட்டு போட முயன்ற சிலர் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் கோர்ட் அருகே புதுப்பேட்டை சாலையில் 106-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் பாலகங்கா, தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். பாலகங்கா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாநகர போக்குவரத்து பஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தலைமை நீதிபதியிடம் அதிமுக முறையீடு

சென்னை, அக். 13-
சென்னையில் பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டு வருவதாகவும், உடனடியாக தேர்தலை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் அதிமுக முறையிட்டுள்ளது.
அதிமுக எம்.பி. ஜோதி, இன்று காலை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வீட்டுக்கு சென்று அவரிடம் வாய்மொழியாக ஒரு புகார் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. பல இடங்களில் கள்ள ஓட்டுகள் போடப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும். மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மாநில தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
இது குறித்து அவசர விசாரணை நடத்த வேண்டும்Õ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, மதியம் 2 மணிக்கு இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாக தெரிவித்தார்.

தோல்விக்கு ஜெயலலிதா சொல்லும் காரணம் கருணாநிதி பதிலடி

சென்னை, அக். 13-
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளிக்கு காலை 9 மணிக்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மனைவி ப்ரியாவுடன் வந்து ஓட்டு போட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி, மனைவி தயாளு அம்மாள், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தனர்.
வெளியே வந்த முதல்வரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் கூறியதும்:
திமுக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பிரகாசமாக உள்ளது.
கள்ள ஓட்டு போட திமுக திட்டமிட்டிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
தோல்விக்கு அவர் சொல்லும் காரணம்தான் இது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

செய்தி: தமிழ்முரசு

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com