Tuesday, October 31, 2006

கலகலத்த கூட்டணி...!

உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டதில் ஒதுக்கப்பட்ட இடங்கள் பலவற்றை அக்கட்சிகள் இழந்துள்ளன. இது குறித்து அக்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதில் ஒருபடி மேலே சென்று பாமக தலைவர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி 'திமுக பச்சை துரோகம்' என்று வர்ணித்தார். தாங்கள் இனி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறியிருப்பதன் மூலம் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதனால் இனி இப்போதைய உள்ளாட்சித் தலைவர்கள் பலரின் பதவி தொடருமா என்பது கேள்விக்குறியாகி விட்டது. கூட்டணிக்காக அந்தந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல், சில உறுப்பினரே தேர்வான இடங்களில் கூட மாற்றுக் கட்சியினர் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இது எதிரொலிக்கக் கூடும்.

தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணிகள் கலகலக்கத் தொடங்கி விட்டன. மக்களாலேயே உள்ளாட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். அதை மாற்றியதன் விளைவைத் தான் இப்போது பார்க்கிறோம். கட்சி மாறல், வேட்பாளர் கடத்தல், விலைபேசல் பேரங்கள் என தலைவர்கள் தேர்தலில் நடைபெற்ற அலங்கோலங்களும், அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டணி கலகலப்புகளும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன.

அடுத்த தேர்தலுக்குள் இன்னும் பல கட்சிமாறல்களையும் காட்சிமாற்றங்களையும் மக்கள் சந்திக்க நேரிடும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

மக்களாட்சியில் மக்களை பாவைகளாக்கி அரசியல் கட்சிகள் ஆடும் அரசியல்கூத்து!

Sunday, October 29, 2006

திமுக ஏமாற்றியது?

ஒதுக்கப்பட்ட இடங்களில் பா.ம.க.- காங்கிரஸ், கம்யூனிஸ்டு தோல்வி: தி.மு.க. மீது குற்றச்சாட்டு

சென்னை, அக். 29-

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 6 மாநகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. நகராட்சி, பேரூராட்சி, பஞ் சாயத்து ïனியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. திடீரென்று போட் டியிட்டு வெற்றி பெற்றது. இதனால் கம்யூனிஸ்டு, பா.ம.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு ஒதுக்கிய ஆற்காடு நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. சிதம்பரம் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. கூட்டணி இடபங்கீடு பட்டிய லில் பா.ம.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகள் பெயரும் இடம் பெற்று இருந்தது. இருகட்சி சார்பி லும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பவுசியாபேகம் வெற்றி பெற்றார்.

திட்டக்குடி பேரூராட்சி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 3 ஓட்டுகளே பெற்று பா.ம.க. வேட்பாளர் வசந்தா தோல்வி அடைந்தார். தி.மு.க. ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் மன்னன் 13 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நல்லூர் ஒன்றியத்தில் அக்கட்சி சார்பில் யாரும் போட்டியிடாததால் தி.மு.க. வேட்பாளர் ஜெயசித்ரா வெற்றி பெற்றார்.

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாடுதுறை நகரசபையில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் லிங்குராஜ் 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் 13 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

சீர்காழி நகரசபையில் தி.மு.க.வும், பா.ம.க.வும் மோதிக் கொண்டது. இதில் தி.மு.க.வை சேர்ந்த சாந்தினி 18 ஓட்டுகள் பெற்று தலைவர் ஆனார். பா.ம.க.வை சேர்ந்த சுபா 6 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

செம்பனார் கோவில் ïனியன் தலைவர் தேர்தலில் தி.மு.க., பா.ம.க. இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ம.க. தோல்வி அடைந் தது.

ஈரோடு காசிபாளையம் 3-ம் நிலை நகராட்சி தலை வர் பதவி தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட் சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தி.மு.க. சார்பில் சுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈரோடு பெரிய அக்ரகாரம் பேரூராட்சியில் தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இவரது வேட்பு மனுவை வழிமொழிய யாரும் முன் வராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜாபர் சாதிக் 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவி உழவர் உழைப்பாளர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க. முயற்சி செய்ததால் உழவர் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த செல்லமுத்து வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை. தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ் தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தலைராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. தலைவர் பதவி வேட்பாளராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ம.க. பிரமுகர் காமராஜ் அறிவிக்கப்பட்டார்.

அவர் மனுதாக்கல் செய்ய வரும்போது தி.மு.க. வேட்பாளராக ஆதிமகேந் திரன் மனுதாக்கல் செய்த விவரம் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் `திடீரென்று' மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

தலைவர் பதவிக்கு நிறுத் தப்பட்ட தி.மு.க. வேட்பாளர் ஆதிமகேந்திரன் வெற்றி பெற்றார். இதை கண்டித்து பா.ம.க.வினர் மேகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஓசூர் நகராட்சி தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. பா.ம.க.வைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் எஸ்.ஏ.சத்யா போட்டியிட்டார். இதில் எஸ்.ஏ.சத்யா வெற்றி பெற்றார்.

இந்த நகராட்சியில் மொத் தம் 30 கவுன்சிலர்கள் உள்ள னர். இதில் தி.மு.க.வுக்கு 10 கவுன்சிலர்களும், காங்கிர சுக்கு 4 கவுன்சிலர்களும், பா.ம.க.வுக்கு 2 கவுன்சிலர் களும் உள்ளனர். அ.தி.மு.க. வுக்கு 7 பேரும், விஜயகாந்த் கட்சிக்கு ஒரு கவுன்சிலரும், 6 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.

தி.மு.க. கூட்டணிக்கு 16 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்ததால் பா.ம.க. வேட் பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணியில் இருந்து 6 பேர் கட்சி மாறி ஓட்டு போட்டு உள்ளனர். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களில் 6 பேர் கட்சி மாறி ஓட்டு போட்டதால் எஸ்.ஏ.சத்யா 16 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெண்ணந் தூர், மல்லசமுத்திரம், மோக னூர் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களும், ஆலாம்பாளை யம், வெண்ணந்தூர், சேந்த மங்கலம், அத்தனூர் ஆகிய 4 பேரூராட்சிகளும் ஒதுக்கப் பட்டு இருந்தன.

இதில் மல்லசமுத்திரம், மோகனூரில் தி.மு.க. வேட் பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 4 பேரூராட்சி தலைவர் இடங்களில் தி.மு.க-2, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.

குழித்துறை நகரசபை கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட் டது. ஆனால் தி.மு.க. வேட்பா ளர் ஆசைதம்பி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நாகர்கோவில் நகரசபை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக மேரிஜோஸ்பின் அம்மாள் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரை எதிர்த்து காங்கிரஸ்ë போட்டி வேட்பாளராக அசோக்சாலமன் போட்டி யிட்டு வெற்றிபெற்றார்.

ரீத்தாபுரம் பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு பா.ஜனதா, கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

கணபதிபுரம் பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கும் தே.மு.தி.க. பா.ஜனதா உதவியுடன் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. திங்கள்சந்தை பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தி.மு.க. ஆதரவுடன் பா.ஜனதா வெற்றி பெற்றது.

பாகோடு பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைவர் பதவியை பிடித்துள்ளனர்.

கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட கடையாலு பேரூராட்சியில் காங்கிரசும் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப் பட்ட திற்பரப்பு பேரூராட் சியை பா.ஜனதாவும் கைப்பற்றியது. ஏழுதேசம் பேரூராட்சி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பா.ஜனதா உதவியுடன் காங்கிரஸ் பேரூராட்சியை பிடித்துள்ளது.

குருந்தன்கோடு யூனியன் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கவுன்சிலர், அ.தி. மு.க.வுக்கு ஆதரவு அளித் துள்ளதை அடுத்து அ.தி.மு.க. போட்டியின்றி தேர்ந்தெ டுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சுயேட்சைகள் ஆதரவுடன் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தி.மு.க.- காங்கிரஸ் கட்சி இடையே தகராறு ஏற்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் சேத்தூர் பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. இங்கு அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பதவியை தன் வசப்படுத்தி உள்ளது. துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு ஆதரவுடன் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

ராஜபாளையம் நகரசபை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு காங்கிரஸ் வேட்பாளர் ரத்தினம்மாள் நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மானாமதுரை பேரூராட்சி தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. மொத்தம் உள்ள 18 வார்டு களில் ஒரு இடத்தில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை. இதனால் தி.மு.க. சார்பில் ராஜாமணி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் அவனியா புரம் நகரசபை பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்தையா வெற்றி பெற்றார். தி.மு.க.வினர் ஆதரவு இல்லாத தால் பா.ம.க. சார்பில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்ட இளஞ்செழியன் மனுதாக்கல் செய்ய வில்லை.

மேலூர் ஊராட்சி ஒன்றி யம் காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. இங்கு காங் கிரசை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அழகு பாண்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. கூட்டணியில் கட்சி மாறி ஓட்டுப் போட்டதால் பா.ம.க.வுக்கு நகரசபை மற்றும் பேரூராட்சி, யூனியன் தலைவர் பதவிகளில் 40 இடங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சி மாறி ஓட்டுப் போட்ட தால் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து ஓசூர் நகரசபை ஆகியவற்றை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த கட்சி சார்பில் கவுன்சிலர் சிவகாமி சுந்தரி தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டார்.

நேற்று காலை 9.30 மணிக்கு சிவகாமி சுந்தரி வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் முன்மொழி யவும், வழி மொழியவும் கேட்டார். அதற்கு அவர்கள் யாருமே முன்வரவில்லை. மாறாக தி.மு.க.வை சேர்ந்த எம்.ஜி.பெல்லும், காங்கிரசை சேர்ந்த மோகன்குமார ராஜாவும் தனித்தனியே தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர்.

இதை பார்த்த இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சிவகாமி சுந்தரி தேர்தலை புறக்கணித்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த எம்.ஜி.பெல் 16 ஒட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

நாங்குநேரி பேரூராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த சங்கரன் வெற்றி பெற்றார். பண்மொழி பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது.

மானூர் ஒன்றிய சேர்மன் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டது இதில் காங்கிரஸ் எந்த வார்டிலும் வெற்றி பெறாததால் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது. சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பா.ம.க. வேட்பாளருக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு என்று ஒதுக்கப் பட்ட ஒரு பேரூராட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் ராதாபுரம் ஒன்றியமும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது.

தி.மு.க.-காங்கிரசால் பா.ம.க. தோற்கடிக்கப்பட்ட தற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திருவண்ணாமலை, வேலூர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி.ராமசாமி ஆகிய 3 பேரிடம் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் விளக்கம் கேட்டு இருக்கிறார்.

செய்தி: மாலைமலர்

மாநகராட்சி மேயர்

சென்னையில் திமுகவைச் சேர்ந்த மா. சுப்பிரமணியம் மேயராகவும் ஆர்.சத்தியபாமா துணைமேயராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைமேயர்கள்

முன்னதாக நேற்று நடைபெற்ற மாநகராட்சி துணைமேயர் தேர்தல் விவரம்.

திருச்சியில் மு.அன்பழகன், மதுரையில் பி.எம்.மன்னன்,
கோவையில் நா.கார்த்திக் ஆகிய திமுக கவுன்சிலர்கள் துணை மேயர்களாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

சேலத்தில் துணை மேயர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் சி.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அ.தி.மு.க.வை சேர்ந்த வி.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். 43 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று சி.பன்னீர்செல்வம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு 17 ஓட்டுகள் கிடைத்தன.

நெல்லை துணை மேயர் பதவிக்கு தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளரான முத்துராமலிங்கத்தை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த பி.சுப்பிரமணியன் போட்டியிட்டார். முத்துராமலிங்கத்துக்கு 26 ஓட்டுகளும், சுப்பிரமணியனுக்கு 25 ஓட்டுகளும் கிடைத்தன. 2 ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளர் முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார்.

நகராட்சிகள்

மொத்தம் உள்ள 152 நகராட்சிகளில் தி.மு.க. கூட்டணி 129 நகராட்சி தலைவர்கள் பதவியை கைப்பற்றி உள்ளது. (தி.மு.க-97, காங்-19, பா.ம.க-7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-4, இந்திய கம்யூனிஸ்டு-1, விடுதலை சிறுத்தைகள்-1).

அ.தி.மு.க.வுக்கு 17 இடங்கள் கிடைத்து உள்ளன. சுயேச்சைகளுக்கு 7 இடங்கள் கிடைத்து உள்ளன. 2 இடங்களில் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Saturday, October 28, 2006

போட்டியின்றி தேர்வு

மதுரை, சேலம், நெல்லை, ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களாக முறையே திமுகவைச் சேர்ந்த தேன்மொழி கோபிநாத், ரேகா பிரியதர்ஷினி, ஏ.எல்.சுப்ரமணியம், கோவையில் காங்கிரஸ் சார்பில் காலனி வெங்கடாச்சாலம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அதிமுக சார்பில் மரியம்பிச்சை என்ற கவுன்சிலர் போட்டியிட்டார். மொத்தம் 60 வாக்குகளில் 42 வாக்குகள் பெற்று சாருபாலா தொண்டைமான் மேயராக தேர்வு பெற்றார்.

மொத்தம் உள்ள 152 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலானவற்றை திமுக கூட்டணியினரே கைப்பற்றினர்.

திண்டுக்கல், ஆத்தூர், ஈரோடு, கரூர், சத்தியமங்கலம், அறந்தாங்கி, மேலூர், திருத்துறைப்பூண்டி, பத்மநாபபுரம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

சிவகாசி, திருமங்கலம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. திண்டிவனம், தாராபுரம் ஆகிய தலைவர் பதவி தேர்தலில் பாமக வெற்றி பெற்றது.

ஓசூர், நாமக்கல், குடியாத்தம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக வென்றது. குழித்துறை, குளச்சல் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை எந்தக் கட்சியையும் சேராத சுயேச்சைகள் வென்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பவானி, புளியங்குடி, பரமக்குடி, பூந்தமல்லி நகராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

குளித்தலை நகராட்சித் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை எதிர்த்து திமுக கவுன்சிலர் போட்டியிட்டு தலைவர் பதவியைக் கைப்பற்றி விட்டார். குழித்துறை நகராட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு காங்கிரஸ் பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

மொத்தம் உள்ள 152 நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக கூட்டணி 127 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் திமுக 95 தலைவர் பதவிகளையும், காங்கிரஸ் 20 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், விடுதலைச் சிறுத்தைகள் நெல்லிக்குப்பம் நகராட்சியிலும் வெற்றி பெற்றனர்.

அதிமுகவுக்கு 16 நகராட்சித் தலைவர் பதவிகள் கிடைத்துள்ளன. கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு ஒரு நகராட்சியும் கிடைக்கவில்லை. சுயேச்சைகள் 7 நகராட்சித் தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.

மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவிகளில் திமுக-15, காங்கிரஸ்-5, பாமக-4, இந்திய கம்யூ-1, மார்க் கம்யூ-1, அதிமுக-1 வெற்றி பெற்றுள்ளனர்.

Friday, October 27, 2006

காங்கிரஸ் மேயர்கள்

சென்னை தவிர 5 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல் நாளை (அக்டோபர் 28) நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் மேயர், துணைமேயர் தேர்தல் நாளை மறுநாள் அக்டோபர் 29 சனிக்கிழமை நடைபெறுகிறது.

மேயர்கள், துணை மேயர்களை அந்தந்த மாநகராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் நாளை தேர்ந்து எடுக்கிறார்கள். காலை 9.30 மணிக்கு மேயர் தேர்தலும், 11 மணிக்கு துணை மேயர் தேர்தலும் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை காலை நடைபெறுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தால் மறைமுக தேர்தல் மூலம் மேயர், துணை மேயர்களை கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். ஒருவர் மட்டுமே ஒரு பதவிக்கு மனு செய்திருந்தால் மேயர் அல்லது துணை மேயராக அவரே ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் படுவார். தேர்தலில் வெற்றி பெறும் மேயர், துணை மேயர்கள் நாளை பதவி ஏற்கிறார்கள்.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் காலனி வெங்கடாசலம், திருச்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டமான் ஆகியோர் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

பிற மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் விவரம்:

Wednesday, October 25, 2006

மேயர் வேட்பாளர்கள்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தலில் வென்ற உறுப்பினர்கள்,ஊராட்சித் தலைவர்கள் இன்று பதவி ஏற்றனர்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் வென்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 155 கவுன்சிலர்களில் 153 பேர் மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 4 உறுப்பினர்களில் சுந்தரமூர்த்தி (61-வது வார்டு), எம்.கிருஷ்ணன் (71-வது வார்டு) ஆகியோர் ஜெயலலிதா உத்தரவுக்கேற்ப பதவியை ராஜினாமா செய்து விட்டதால் அவர்கள் இருவரும் மட்டும் இன்று பதவி ஏற்கவில்லை. 1-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி, 26-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். ராஜினாமா செய்ய மறுத்ததால் இவர்கள் இருவரையும் ஜெயலலிதா நேற்று கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.

40-வது வார்டில் வெற்றி பெற்ற ஒரே ஒரு ம.தி.மு.க. கவுன்சிலர் கன்னியப்பன் வைகோ உத்தரவுப்படி ராஜினாமா செய்ய மறுத்து இன்று பதவியேற்றார். இதனால் இவரை இன்று வைகோ மதிமுகவை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் மாநகராட்சி மேயர், துணைமேயர் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

சென்னை

மேயர்-மா.சுப்பிரமணியம்

துணை மேயர்-ஆர்.சத்தியபாமா

மதுரை

மேயர்-தேன்மொழி கோபிநாதன்

துணை மேயர்

பி.எம்.மன்னன்

நெல்லை

மேயர்-ஏ.எல். சுப்பிரமணியம்

துணை மேயர்-கா.முத்துராமலிங்கம்

சேலம்

மேயர்-ரேகா பிரியதர்ஷினி

துணை மேயர்-பி.பன்னீர் செல்வம்

கோவை

துணை மேயர்-ந.கார்த்திக்

திருச்சி

துணை மேயர்-மு.அன்பழகன்

கோவை, திருச்சிக்கு திமுக மேயர் வேட்பாளர்களை அறிவிக்காததால் இங்கு காங்கிரஸ் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

மேயர், துணைமேயர் தேர்தல் அக்டோபர் 28 சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினமே நகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி தலைமைப் பொறுப்புகளுக்கான தேர்தலும் நடைபெறும்.

Tuesday, October 24, 2006

நாளை பதவியேற்பு

சென்னை மாநகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் நாளை பதவி ஏற்பு: 29-ந்தேதி மேயர் தேர்தல்

சென்னை, அக்.24-

சென்னை மாநகராட் சிக்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 155 வார்டுகளில் 149-ல் வெற்றி பெற்றது.தி.மு.க. தனித்து பொறுப்பேற்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் பெற் றுள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார்கள். இதற்கான விழா மாநகராட்சி 2-வது மாடியில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெறுகிறது.

புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் எம்.பி. விஜயகுமார் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
நாளை மேயர், துணை மேயர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 28-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் 29-ந்தேதி தேர்வு செய்யப்படுவார். இவர் களுக்கு மாநகராட்சி கமிஷனர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

கவுன்சிலர்களாக பதவி ஏற்பவர்கள் மட்டுமே மேயர், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும். எனவே சென்னை மாநகராட்சி வார்டு களில் தேர்வானவர்கள் நாளை தவறாமல் பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

சென்னை மாநகராட்சி மேயர் 29-ந்தேதி தேர்வானதும் அவரிடம் மேயருக்கான கவுன், ரோப் மற்றும் ஆபரணங்கள் ஒப்படைக்கப்படும். இதை யடுத்து அவர் தன் அறைக்கு சென்று பணிகளை தொடங்கு வார்.

அதன் பிறகு சென்னை மாநகராட்சி முதல் கூட்டத்துக் கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும். அது போல இதர உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவி ஏற்பவர்கள் முறைப்படி முதல் கூட்டத்துக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்புகளை வெளி யிடுவார்கள்.

தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று இருப்பதால் தி.மு.க. கவுன்சிலர்களில் ஒருவர் மேயராக நிறுத்தப்படுகிறார். மா.சுப்பிரமணியன், தன சேகரன், சுரேஷ்குமார் ஆகி யோரில் ஒருவர் மேயர் பதவிக்கு அறிவிக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டி பஇருக்க வாய்ப்பு இல்லை.எனவே அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்.

சென்னை மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்டு இதுவரை 45 மேயர்கள் பதவியில் இருந் துள்ளனர். 29-ந் தேதி பதவி ஏற்பவர் 46-வது மேயர் ஆவார்.

நாளை நடக்கும் உறுப்பினர் பதவி ஏற்பு விழா மற்றும் 29-ந் தேதி நடக்கும் மேயர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களுக்கு விசேஷ அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

செய்தி: மாலைமலர்.

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com