Tuesday, October 24, 2006

அதிமுக கவுன்சிலர்கள் ராஜினாமா

சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெறும் நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்தன.

புவனேஸ்வரி (வார்டு 1),
சுபாஷ் சந்திரபோஸ் (வார்டு 26),
சுந்தரமூர்த்தி(வார்டு 61),
எம்.கிருஷ்ணன் (வார்டு 71)

ஆகியோர் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்று மாநகராட்சி கவுன்சிலராக தேர்வாகியுள்ளனர். இதனால் இவர்கள் நால்வரையும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யும்படி அதிமுக தலைமை கட்டளையிட்டது. லட்சக்கணக்கில் செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்ற பின் ராஜினாமா செய்ய அவர்கள் தயக்கம் காட்டினர். எனவே தேர்தலில் செலவழித்த பணத்தை கட்சியின் சார்பில் ஈடுகட்டி விடுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின் சுந்தரமூர்த்தி, கிருஷ்ணன் ஆகிய இருவரும் ராஜினாமா கடித்த்தை அளித்ததாக தெரிகிறது. புவனேஸ்வரி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்ய மறுத்து விட்டதால் அவர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் திமுகவில் சேரக்கூடும் எனத் தெரிகிறது. இதனால் சென்னை மாநகராட்சியில் அதிமுக உறுப்பினர்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

1 comment:

Anonymous said...

sasikala irukkum vari JJ padu
thindaddam.

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com