Friday, October 13, 2006

தேர்தலில் வன்முறை

சென்னை மாநகராட்சி ஓட்டுப்பதிவில் வன்முறை:
அ.தி.மு.க.-ம.தி.மு.க. வேட்பாளர்கள் மீது தாக்குதல்


சென்னை, அக். 13-

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை, கோவை, சேலம், நெல்லை ஆகிய 4 மாநகராட்சி, 45 நகரசபை, 23 மூன்றாம் நிலை நகரசபை, 281டவுன் பஞ்சாயத்து, 6557 கிராம பஞ்சாயத்துக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.

முதல் கட்ட ஓட்டுப்பதிவுக் காக 42 ஆயிரத்து 206 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப் பட்டிருந் தன. தமிழக போலீசாருடன் பக்கத்து மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த 23 கம் பெனி போலீசார், 20 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர், 20 ஆயிரம் என்.எஸ்.எஸ். பிரிவினர், 500 வனத்துறை ஊழியர்கள், 1100 தீயணைப்பு வீரர்கள், 9 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 2 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர்.

இன்று தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் 5423 இடங்களில் வன்முறை ஏற்பட லாம் என்று கருதப்பட்டதால் அங்கு அதிரடிப்படை வீரர் கள் நிறுத்தப்பட்டனர். காலை 7 மணிக்கு வாக்காளர் கள் ஆர்வமுடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர். ஆனால் மக்கள் அமைதியாக வாக்களிக்க இயலவில்லை.

சென்னையில் 155 வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்ருந்த 3295 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதில் 1177 பகுதிகளில் பிரச்சினை ஏற்பட லாம் என்று கூடுதல் போலீ சார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

ஓட்டுப்பதிவு தொடங்கியசில நிமிடங்களில் சென்னை யில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. மயிலாப்பூர், சிந்தா திரிப்பேட்டை, ஆயிரம் விளக்கு மற்றும் வட சென்னை பகுதிகளில் வாக்கு சாவடி களில் மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

113-வது வார்டுக்கான ஓட்டுச்சாவடி அமைந்துள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக் குள் சைதை பாலாஜி என்ப வர் தலைமையில் சிலர் கும்ப லாக வந்தனர். அவர்கள் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டுச்சீட்டுக்களை எடுத்து தாங்களாகவே முத்திரை குத்திப் போட்டனர். இதற்கு அ.தி.மு.க. `பூத்' ஏஜெண்டு சண்முகம் எதிர்ப்பு தெரிவித் தார்.

அவரை அந்த கும்பல் தாக்கியது. இதில் சண்முகம் மூக்கு கண்ணாடி உடைந்தது. அவர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் கண்டு கொள்ளாததால் அத்துமீறி வந்த கும்பல் கள்ள ஓட்டு போட்டு விட்டு சென்று விட்டது.

ஜாம்பஜார், நாகேசுவரராவ் பூங்கா, ஜாபர்கான்பேட்டை பகுதிகளில் ஏராளமானவர்கள் கும்பல், கும்பலாக வந்து கள்ள ஓட்டு போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடித்து துரத்தப்பட்டனர். இதனால் பல இடங்களில் வாக்காளர்களிடையே பீதி ஏற்பட்டது.

இதை பயன்படுத்தி பல இடங்களில் ஏராளமான கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன. சென்னையில் பல இடங்களில் குடிசைவாசி பகுதி மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப் படவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதி 8-வது வார்டில் உள்ள 192-வது எண் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போடப்படுவதாக அ.தி.மு.க.வினர்குற்றம் சாட்டினர். ஒருவர் கட்டாககொண்டு வந்த வாக்குச் சீட்டை வடசென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன் பறித்தார்.

அங்கு தி.மு.க.-அ.தி.மு.க. வினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. மோதலுக்கு தயார் ஆனார்கள். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

சைதாப்பேட்டை 135-வது வார்டில் உள்ள 21 மற்றும் 25-வது எண்கள் கொண்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க ஆண்களும், பெண் களும் திரண்டிருந்தனர். காலை 7.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் அங்கு புகுந்தது.

வாக்களிக்க நின்றவர்களை யும், அ.தி.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டுகளை அடித்து விரட்டினர். இதை தடுத்ததேர்தல் பணியாளர் மிரட் டப்பட்டனர். வாக்கு சாவடி களை ஒரு கும்பல் கைப்பற் றியது. அவர்கள் வாக்களிக்க வந்தவர்கள் பெயர்களை மட்டும் பதிவு செய்து கொண்டு கள்ள ஓட்டு போட்டனர்.

வாக்குசாவடி கைப்பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 135-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் விஜயா வந்தார். அவருடன் ம.தி.மு.க. நிர்வாகிகள் மதியழகன், வெங்கட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி யினர்கள்ள ஓட்டு போடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த கும்பல் உருட்டுக்கட்டைகளால் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் விஜயாவை தாக்கினர் உடன் வந்தவர்களும் தாக்கப்பட்டனர். மேலும் சுயேட்சை பெண் வேட் பாளர்களான அமுதா, பரிமளா, விஜயலட்சுமி, மஞ்சுளா, டெல்லிபாய் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.

இதனை அங்கு நின்ற போலீசார்கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. போலீசாரை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷம் போட்டனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனையடுத்து சைதாப் பேட்டை இன்ஸ்பெக்டர் ராதா கிஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் அ.தி.மு.க.வேட்பாளர் விஜயா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 6 பேரையும் அவருடன் வந்த 50க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள டி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

சேப்பாக்கம் பகுதி 81-வது வார்டு ம.தி.மு.க. வேட்பாளர் மார்க்கெட் சேகரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. கள்ள ஓட்டு போட முயன்றதைதடுத்ததால் ஒரு கும்பல் அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

147, 151-வது வார்டுகளில் உள்ள வாக்கு சாவடிகளை கார்களில் வந்த ஒரு கும்பல் கைப்பற்றியது. அங்கிருந்த அ.தி.மு.க., ம.தி.மு.க. பூத் ஏஜெண்டுகளை அந்த கும்பல் அடித்து வெளியேற்றியது. ஓட்டு போட வந்த பொதுமக்கள் ஓட்டு போடாமல் பயந்து ஓட்டம் பிடித்தனர்.

ராயபுரம் 19-வது வார்டில் வாக்கு சாவடிக்குள் ஒரு கும்பல் புகுந்து கைப்பற்றியது. பட்டேல் நகர் வாக்கு சாவடியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நேதாஜி கணேசன் என்பவர் மேற்பார்வையாள ராக இருந்தார். அவரை தி.மு.க.வைச் சேர்ந்த கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் 108-வது வார்டில் காலை 8.30 மணிக்கு ஒரு கும்பல் வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து கள்ள ஓட்டு போட்டது. இதற்கு அ.தி. மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த கும்பல் கத்தியை காட்டி கள்ள ஓட்டுக்களை பதிவு செய்தது.

பாதுகாப்புக்கு நின்ற போலீ சார் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டனர். கள்ள ஓட்டு போடப்படும் தகவல் அறிந்ததும் 108-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் நுங்கை மாறன் அங்கு விரைந்தார். அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

போலீசார் எதையும் கண்டு கொள்ளாததால் நுங்கை மாறன் சாலை மறியல் செய்ய முயன்றார். உடனடியாக போலீசார் பாய்ந்து சென்று அவரை கைது செய்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறினார்கள்.

20-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் பிரபுராம். இவர் என்.என். கார்டன் வாக்கு சாவடி அருகில் நின்று கொண்டிருந்தார். அப் போது 50-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் திடீரென அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.8-வது வார்டு கார்னேசன் நகர் மாநகராட்சி பள்ளியில் வாக்குப்பதிவு நடந்த போது ஒரு கும்பல் புகுந்து சோடா பாட்டிலை உடைத்து ரோட்டில் வீசியது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கள்ள ஓட்டு போடுவதை போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்ததை கண்டித்து ராயபுரம் மெயின் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காசிமேடு மெயின் ரோட்டிலும் மறியல் செய்தனர். ரோட்டில் உட்கார்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

தண்டையார்பேட்டையில் தே.மு.தி.க. பெண் வேட்பாளர் ஒருவர் ரோட்டில் உருண்டு புரண்டு மறியல் செய்தார். போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 55-வது வார்டில் கள்ள ஓட்டு போட வந்த கும்பலை தே.மு.தி.க. வேட்பாளர் மதியழகன் தடுத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இதை அறிந்த தே.மு.தி.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்தி: மாலைமலர்

Wednesday, October 11, 2006

இடைத்தேர்தல் முடிந்தது

மதுரை மத்திய தொகுதியில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.டிஆர். பழனிவேல்ராஜன் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தி.மு.க. வேட்பாளராக கவுஸ்பாட்சா, அ.தி.மு.க. வேட்பாளராக ராஜன் செல்லப்பா, தே.மு.தி.க. வேட்பாளராக பன்னீர்செல்வம் உள்பட 19 பேர் களத்தில் உள்ளனர்.

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மதுரையில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தனர்.

அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு இடைத் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவுற்றது.

காலையிலேயே கட்சி தொண்டர்கள் கும்பல், கும்ப லாக ஓட்டு போட வந்தனர். அவர்களை வாக்கு சாவடி முன்பு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சோதனை செய்த பின்பே உள்ளே செல்ல அனு மதித்தனர். அவர்கள் வாக்கு சாவடி முன்பு வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

தி.மு.க. வேட்பாளர் கவுஸ்பாட்சா மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா. மகளிர் பள்ளியில் உள்ள வாக்கு சாவடிக்கு குடும்பத்துடன் சென்று ஓட்டு போட்டார்.

ஓட்டு சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 100 அடி தூரத்திலேயே பாதுகாப்புக்கு நிற்கும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். மேலும் ஓட்டு போடுவதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின்பே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதுதவிர ஓட்டு பதிவு தொடங்கியதுமே தேர்தல் அதிகாரிகளும் வாகனத்தில் ரோந்து சுற்றி வந்தனர். ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் சென்று அவர்கள் ஓட்டுபதிவை பார்வையிட்டு தில்லு முல்லுகள் எதுவும் நடக்கிறதா என்றும் கண்காணித்தனர்.

இதுபோல 154 வாக்கு சாவடிகளிலும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்த புகைப்படக்காரர்கள் மூலம் ஓட்டு பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்காளர்களும் வீடியோ படம் எடுக்கப்பட்டனர்.

மத்திய தொகுதியில் உள்ள 154 வாக்கு சாவடிகளிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். 3 அடுக்கு முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதில் துணை ராணுவம், கர்நாடக அதிரடி படை, மாநில கமாண்டோ பிரிவு போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுதவிர வாகனங்களிலும் போலீசார் உயர் அதிகாரி களுடன் ரோந்து சுற்றி வந்த னர். பதட்டமான பகுதிகளில் கலவரங்களை தடுக்கும் `வஜ்ரா' வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

மத்திய தொகுதியில் மொத்தம் 1,32,263 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்வாக்காளர்கள் 66,333 பேரும், பெண்வாக்காளர்கள் 65,898 பேரும் உள்ளனர். 95 சதவீதம் பேருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற அக்டோபர் 17 அன்று நடக்கிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இது மின்னணு இயந்திர வாக்குப்பதிவு என்பதால் அன்று பிற்பகலுக்குள் யார் வெற்றி பெற்றார் என்பது தெரிந்து விடும்.

முதல்கட்ட பிரச்சாரம் முடிவு

தமிழ்க உள்ளாட்சித் தேர்தல்களுக்கான முதல்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவு பெற்றது. முதல் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் 13ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளுக்கும் 45 நகராட்சிகள், 23 கீழ்நிலை நகராட்சிகள், 281 நகர பஞ்சாயத்துகள், 195 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றில் முதல்கட்டத் தேர்தல் அக்டோபர் 13 அன்று நடைபெறுகிறது.

மீதமுள்ள தொகுதிகளுக்கு அக்டோபர் 15 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

Saturday, October 07, 2006

தேர்தல் கருத்து கணிப்பு

லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவு
* மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு
* கிராமங்களில் அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு
* இளைஞர்கள் மத்தியில் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு

சென்னை, அக்.7-

மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், கிராமங்களில் அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாகவும், இளைஞர்கள் மத்தியில் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு இருப்பதாகவும் லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

லயோலா கல்லூரி ஊடக ஆய்வியல் புலம் சார்பில மாநில அளவில் ``மாற்று அரசியல் பண்பாடு நோக்கி...'' என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை நேற்று வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மத்திய தொகுதி

மதுரை மத்திய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அக்டோபர் 1, 2 ஆகிய நாட்களில் அந்தத் தொகுதியில் உள்ள 15 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கு 80 முதல் 90 பேர் வரை என மொத்தம் ஆயிரத்து 260 நபர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது.

மதுரை மத்திய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு 51.2 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 22.6 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 17.6 சதவீதம் பேரும் ஓட்டுப் போடுவோம் என்று கூறினார்கள்.

ஓட்டுப் போடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று 6.2 சதவீதம் பேரும், யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது பற்றி கருத்து சொல்ல முடியாது என்று 2.4 சதவீதம் பேரும் தெரிவித்தனர்.

ஓட்டு வங்கி

மே மாதத் தேர்தலின்போது தி.மு.க. 45.8 சதவீத ஓட்டுகள் பெற்றி ருந்தது. தற்போது 5.4 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. தே.மு.தி.க.வுக்கு மே மாத தேர்தலில் 12.8 சதவீத வாக்குகள் கிடைத்தன. இப்போது 4.8 சதவீத வாக்குகள் அதிகமாக கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. அ.தி.மு.க.வுக்கு மே மாத தேர்தலில் 38.2 வாக்குகள் கிடைத்தன. இப்போது 15.6 சதவீத ஓட்டுகள் குறைவாகக் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

பெண்களை பொறுத்தவரை தி.மு.க.வுக்கு 56.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 17.1 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 15.4 பேரும் ஓட்டுப் போட முடிவு செய்திருப்பதாக கூறினார்கள்.

தனியார் துறையில் பணிபுரிவோர் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் தே.மு.தி.க.வுக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் நிலவரம்

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் கிராம பஞ்சாயத்துகளில் மட்டும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

கிராமங்களில் சிக்குன் குனியா நோய் பரவலாக உள்ளது. ``இந்த விஷயத்தில் அரசு இன்னும் சற்று அதிகக் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்'' என்று பலரும் கூறினார்கள்.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவது தொடர்பாக, சில கிராமங்களில் புதிய சிக்கல்கள் முளைத்துள்ளன. புறம்போக்கு நிலத்தில் இதுவரை விவசாயம் செய்து வந்து உள்ளோரிடமிருந்து அந்த நிலம் எடுக்கப்பட்டு வேறு நபர்களுக்கு கொடுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்தோரை ஆங்காங்கே சந்திக்க முடிந்தது.

விலை உயர்வு

எகிறிக் கொண்டு செல்லும் விலைவாசியால் பல கிராமங் களில் மக்கள் மூச்சுத் திணற ஆரம் பித்துள்ளதை உணர முடிகிறது.

எனினும், தி.மு.க. தலைமையிலான அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அனைத்துக் கிராமங்களிலும் கணிசமான வரவேற்பு உள்ளது.

சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்கட்சி ஆகியுள்ள போதிலும் கிராமங்களில் அது இன்னும் வலுவாகவே உள்ளது. சில கிராமங்களில் பிற கட்சிகளை விட அதிக செல்வாக்குடன் விளங்குகிறது.

உள்ளூர் செல்வாக்கு, சாதி, அரசியல் கட்சிகள் என பல காரணிகள் உள்ளாட்சி தேர்தலை தீர்மானிக்கும் நிலை இருப்பதால் அவற்றை ஆய்வு செய்வதற்கான சரியான கருவிகள் இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள சுழற்சி முறையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டைப் பரவலாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பொது தொகுதியில் இருந்து தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதியாக மாற்றியிருப்பதை மக்கள் முழுமையாக ஏற்கவில்லை.

இதனால் மக்களிடம் கசப்புணர்வும், காழ்ப்புணர்வும், சில கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பும் வெளிப்படுகிறது.

மேற்கு மாவட்ட கிராமங்களில் பரவலான ஏற்பு உணர்வும், தெற்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பரவலான கசப்புணர்வும் காணப்படுகின்றன.

அச்ச உணர்வு

அரசின் திட்டத்திற்கு உடன்படாவிட்டால் காவல்துறைநட வடிக்கை எடுக்கும் என்ற அச்சம் காரணமாகவும் பல கிராமங்களில் எதிர்ப்பு உணர்வு வெளிப்படையாகத் தெரியவில்லை.

வலிந்து திணித்தல்

கடந்த 10 ஆண்டுகள் பிரச்சினைக்குரியதாக கருதப்படும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய 3 பஞ்சாயத்துகளில், ``அரசு தங்களுக்குப் பாரபட்சம் காட்டுகிறது. பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு எதிராக தேர்தலை வலிந்து திணிக்கிறது'' என்ற உணர்வு தாழ்த்தப்பட்டோர் அல்லாத மக்களிடம் மேலோங்கியுள்ளது.

நாட்டார் மங்கலத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை சாதியின் முக்கியப் புள்ளிகளுக்கு அரசு அதிகாரிகளும், கட்சியினரும் தந்துள்ள `பொருளாதார உத்திரவாதங்களால்' தற்போது தேர்தல் நடத்துவதற்கு வெளிப்படையான எதிர்ப்பு தென்படவில்லை.

இந்த 3 பஞ்சாயத்துகளையும் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரைப் பொறுத்தவரையில், தற்போது கட்சி ரீதியான ஆதரவு இருந்தாலும், பெரும்பான்மை சமூகத்தைப் பகைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது என்ற அச்ச உணர்வும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினத்தந்தி

Friday, October 06, 2006

திமுக &அதிமுக. மோதல்

மதுரையில் தேர்தல் பதற்றம் தி.மு.க.&அ.தி.மு.க. மோதல்
இரு தரப்பினர் மீதும் வழக்கு


மதுரை, அக்.6: மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் நேற்று கடுமையாக மோதிக் கொண்டனர்.

தி.மு.க. தேர்தல் அலுவலகம் சூறையாடப்பட்டது.

கல்வீச்சில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் கார் சேதமடைந்தது.

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மதுரை தெற்குவாசல் தெற்கு கிருஷ்ணன் கோயில் பகுதியில் தி.மு.க.வினர் நேற்று பிரசாரம் செய்தனர். அப்போது, அ.தி.முக பொறுப்பாளர்கள் முருகன், ராமன் ஆகியோர் அங்கு வந்தனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறி தி.மு.க.வினரிடம் தகராறு செய்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அ.தி.மு.கவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி காயம் அடைந்தார்.

இதுகுறித்து அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப் பாவுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சின்னக்கடைத் தெருவிலுள்ள தி.மு.க தேர் தல் அலுவலகத்துக்கு ராஜன் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் கார்களில் விரைந்து வந்தனர். அங்கி ருந்த தி.மு.க.வினரை தாக்கி னர். இருதரப்பிலும் கல்வீச்சு நடந்தது.

இதில், ராஜன் செல்லப்பா வந்த கார் உட்பட 3 வாகனங்களின் கண்ணாடிகள் நொறுக் கப்பட்டன. இதற்கிடையே, தி.மு.க தேர்தல் அலுவலகத் துக்குள் புகுந்த ஒரு கும்பல் சேர், நாற்காலி, கொடிகள் மற்றும் தோரணங்களை அடித்து நொறுக்கியது. அலுவலகத்தையும் சூறையாடியது.

இந்த மோதலில் தி.மு.க.வை சேர்ந்த மோகன் (40), குமரேசன் (38), லிங்க மூர்த்தி (44), சிவா (34) உட் பட பலர் காயம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பின் னர், விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அ.தி.மு.க.வினர் சென்றனர். ஆனால், தெற்கு வாசல் காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில் மோதல் நடந்ததால் அங்கு செல்லு மாறு போலீசார் தெரிவித்த னர். இதை கண்டித்து அ.தி.மு.க.வினர் பெரியார் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பின்னர், மதுரை மாநகர காவல்துறை ஆணை யரின் அலுவலகத்தை முற்று கையிட்டனர். உதவி கமிஷ னர் அறிவுச் செல்வத்திடம் ராஜன் செல்லப்பா புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து கமிஷனர் சிதம்பரசாமி கூறுகையில்,
"அமைச்சர்கள் பூங்கோதை, பெரியகருப்பன் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் பணம் பட்டுவாடா செய்த தாக ராஜன் செல்லப்பா புகார் கூறியுள்ளார். ஆனால், அமைச்சர்கள் இருவரும் முதல்வர் கருணாநிதியை வரவேற்க நெல்லை சென்றுள்ளனர். தவறான புகார் தரப்பட்டிருக்கிறது. மேலும், தேர்தல் விதிகளுக்கு முரணாக ஊர்வலமாக சென்று மறியல் நடத்தியதற் காக அ.தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்றார்.

அ.தி.மு.கவினர் கொடுத்த புகாரின் பேரில் சூடம் மணி, கோபி, பாண்டி, முபாரக் மந்திரி உட்பட 50பேர் மீது தெற்குவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல், தி.மு.க 36வது வார்டு கவுன்சிலர் ராமர் (45) கொடுத்த புகாரின்பேரில் ராஜன் செல்லப்பா, அவரது மகன் சத்தியன், ஆறுமுகம், பரமன், பாஸ்கர், மாரியப்பன், துரைப்பாண்டி, தட்சிணாமூர்த்தி, கொத்தளன், சுப்பு, பூபாலன் ஆகிய 11 பேர் மீது போலீசார் கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ராஜன் செல்லப்பா கூறுகையில், "மதுரை மத்திய தொகுதியில் அதிமுக வெற்றி பெறும். மதுரை மத்திய தொகுதி தேர்தல் பார்வையாளர் ஒருநாள் மட்டுமே தொகுதிக்கு வந்தார்.கொடிகளை அவிழ்க்க சொன்னார். அதன் பின்னர் அவரை காணவில்லை" என்றார்.

செய்தி : தினகரன்

Tuesday, October 03, 2006

போட்டியின்றி தேர்வு

*
தமிழகத்தில் சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை மொத்தம் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவிகளுக்கு அக்டோபர் 13, 15-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக 4 லட்சத்து 79 ஆயிரத்து 335 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இம் மனுக்கள் மீதான பரிசீலனையில் 9 ஆயிரத்து 780 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

77 ஆயிரத்து 973 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதையடுத்து 18 ஆயிரத்து 481 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நடக்க இருக்கும் தேர்தலில் இறுதியாக 3 லட்சத்து 91 ஆயிரத்து 582 பேர் களத்தில் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில்... 473 மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 491 வேட்பாளர்களும், 3 ஆயிரத்து 364 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 17 ஆயிரத்து 486 வேட்பாளர்களும், 964 மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 5,358 வேட்பாளர்களும், 8 ஆயிரத்து 406 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 36 ஆயிரத்து 94 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஊரக உள்ளாட்சிகளில்... 653 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 ஆயிரத்து 222 வேட்பாளர்களும், 6 ஆயிரத்து 502 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 25 ஆயிரத்து 725 வேட்பாளர்களும், 11 ஆயிரத்து 990 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 48 ஆயிரத்து 422 வேட்பாளர்களும், 80 ஆயிரத்து 129 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 லட்சத்து 52 ஆயிரத்து 783 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஒரு வேட்பாளர் இறந்ததால் செங்கோட்டை நகராட்சியின் 23-வது வார்டில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுவதாக இருந்த வாக்குப்பதிவு 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள்-28 பேர், மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 23 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள்-401 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்-68 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-3 பேர், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள்- 628 பேர், கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள்-17,329 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைதலைவர், மேயர், துணைமேயர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் உள்ளாட்சித்தேர்தலுக்குப் பின் வரும் 28ம் தேதி நடத்தப்படுகிறது.

Sunday, October 01, 2006

விஜயகாந்துக்கு தீபம்

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. சின்னங்கள் ஒதுக்கும் பணியும் நிறைவடைந்தது.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 159 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 374 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 லட்சத்து 76 ஆயிரத்து 620 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மிக அதிகபட்ச எண்ணிக்கை சுயேட்சை வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிகிறது. இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் முரசு சின்னம் இல்லாததால் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு பெரும்பாலான இடங்களில் அக்கட்சி தேர்வு செய்த தீபம் சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது. மதுரை இடைத்தேர்தலில் இக்கட்சி முரசு சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முடிவுகளாக நகராட்சித் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு நான்கு இடங்கள் போட்டியின்றி கிடைத்துள்ளன. கடையநல்லூர் நாகராட்சி வார்டு உறுப்பினர்களாக இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்களும் இரண்டு திமுக உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com