Tuesday, September 26, 2006

கருணாநிதி பதில்

திமுகவின் சதியால் தான் முரசு சின்னம் பறிபோனது என்ற தேமுதிகவின் குற்றச்சாட்டு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியது:

இந்திய தேசிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு தேசிய கட்சிகள், நான்கு மாநில கட்சிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தல் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அந்தச் சின்னங்களே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான 35 சின்னங்கள் கொண்ட பட்டியலில் முரசு சின்னம் இடம்பெறவில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அதே நேரத்தில் இன்னமும் முறைப்படி அங்கீகாரம் பெறாத கட்சியாக தே.மு.தி.க. இருப்பதால் அந்தக் கட்சி கேட்கும் சின்னத்திற்கு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. எனவே இதில் தி.மு.க.விற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தி.மு.க.வின் மீது தேவையில்லாமல் திட்டமிட்டு கூறப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com