Tuesday, September 26, 2006

விஜயகாந்த் அறிக்கை

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அதே நேரத்தில் அங்கீகாரம் பெறாத கட்சியாக தேமுதிக இருப்பதால் அந்த கட்சி கேட்கும் முரசு சின்னம் இன்னும் தேர்தல் ஆணையத்தால் அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை.

அங்கீகாரம் பெறாத கட்சி என்பதால் அதன் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும். ஆனால் சுயேட்சை வேட்பாளர்களுக்கான பட்டியலில் முரசு சின்னம் இல்லாததால் அக்கட்சி வேட்பாளர்கள் இந்தச்சின்னத்தை தேர்வு செய்ய முடியாது.

எனவே சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் முரசு சின்னத்தைப் பெற்ற தேமுதிக இம்முறை வேறு சின்னங்களில் தான் போட்டியிட வேண்டியதாகிறது.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் சதியால்தான் தேர்தல் ஆணையம் முரசு சின்னத்தை சுயேட்சை சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com